எனை தொடர்ந்து (என்று சொல்ல மாட்டேன் !!) என் அப்பாவும் தனது புதிய வலைப்பதிவை துவக்கி விட்டார் !! ஒரே வித்தியாசம் தான்... அவரு நல்லா எழுதுவாரு ... அவர ஒப்பிட்டு பாக்கும்போது நான் ரொம்பவே கத்துக்குட்டி தான் !!
என்னை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தியவரை இந்த வலைப்பதிவு உலகுக்கு வரவேற்ப்பதில் பெருமைப்படுகிறேன்..
வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன் !!
என் அப்பாவின் வலைப்பதிவை இங்கே படிக்கலாம் !
1 comments:
சின்ன வயதில் தின்னப்புளி கேட்டான்,
நானோ, நீயே சின்னப்புலி,
உனக்கு எதற்கு தின்னப்புளி என்றேன்.
ஆனால் வளர்ந்த போது தான் தெரிந்தது,
அவன் புலி அல்ல, சிங்கம் என்று.
இப்போது அவன் வீட்டில் இரண்டு ஆண் சிங்கங்கள்,
சிங்க ராசியில் ஒரு பெண் சிங்கம்!
Post a Comment