Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

மீண்டு(ம்) வருகிறதா சென்னை சூப்பர் கிங்க்ஸ் ?

May 4, 2009


இன்னிக்கு (04-May) ஆட்டத்தில இருந்த வேகம், எடுத்த முடிவுகள், அதுக்கு கெடைச்ச வெற்றி - எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பாத்தா.. 'வெற்றிப்பாதைக்கு மீண்டும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ' வர்ற மாதிரியே தெரியுது.. பொறுத்திருந்து பாப்போம், இன்னும் நெறையா ஆட்டங்கள் பாக்கி இருக்கு... நம்ம பசங்க என்ன செய்ய போறாங்கன்னு பாக்கலாம்...

சென்னை அணியோட (தற்போதைய) பலங்கள் -

1. நல்ல பார்ம்-ல இருக்கற பேட்ஸ்மென்கள் -
  • ஹய்டேன் .. தல பட்டய கெளப்பிகிட்டு இருக்கு.. தொடர்ந்து கெளப்புமா ??
  • ரெய்னா .. இள ரத்தம் .. ஒரே சிக்ஸர் , போர்னு தான் வேலாசிகிட்டு இருக்காரு.. அதிரடி தொடர்ந்தா அருமை..
  • பத்ரி & விஜய் .. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் !! நிதானமா தெரிஞ்சாலும், consistent -ஆ ரன் அடிச்சா போதும்!!..
  • தோனி.. ஒரு வழியா அதிரடி ஆட்டம் மறுபடியும் கொஞ்சம் 'தல' காட்டுது.. இன்னும் கொஞ்சம் அதிரடி காட்டினா.. பழைய தோனியா வரணும் (சத்ரியன் ஸ்டைல்-ல!)

2. எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் பவுலர்கள் -

  • பாலாஜி - தங்கத்தமிழன்.. இப்போ வரைக்கும் (இன்னிக்கித்த மேட்ச் தவிர !) நல்லா தான் வீசிக்கிட்டு இருக்காரு.. அய்யா.. போன வருஷம் IPL final ஞாபகத்துல வெச்சுகிட்டு பந்து வீசினா சரி...
  • முரளி.. அட்டகாசம்.. அருமை.. வேற என்ன சொல்ல..
  • ஜகதி / தியாகி .. புதிய கண்டுபிடிப்புகள்.. underdogs -னு சொல்லலாம்.. யாரும் எதிர்பாக்களை இவ்ளோ நல்லா விளையாடுவாங்கன்னு .. சபாஷ்... தொடரட்டும் !!
  • மோர்க்கேல் / ஜாகோப் ஓரம் - ரெண்டு பேரும் திறமைசாலிகள்தான் .. இன்னும் நல்லா வெளையாடலாம்..

இப்போ points table-ல 9 points எடுத்து முதல் எடத்துல இருந்தாலும்.. இது நாளைக்கு வரைக்கும் தான்.. பஞ்சாப் , டெல்லி & ராஜஸ்தான் அணிகள் நாளைக்கு ஆட்டத்தோட முடிவுல புள்ளிகள் அதிகமாகி மேல வரலாம்.. மும்பை அணி புதன்கிழமை ஆட்டத்துல ஜெயிச்சா அவுங்களும் மேல வந்துடுவாங்க...

ஆகமொத்தம் ... தொடர்ந்து நல்லா விளையாடினா மட்டும் தான் சென்னை தன்னோட எடத்த தக்க வெச்சுக்க முடியும்...

நல்லா விளையாடுமா ? ஹய்டேன், ரெய்னா, தோனி, முரளி, பாலாஜி, இவங்களோட இப்போ நல்லா விளையாடிட்டு இருக்கற ஜகதி, தியாகி, பத்ரி & விஜய் எல்லாரும் தோள் குடுத்தா ... வெற்றி நிச்சயம் !! (ஹ்ம்ம்.. சொல்லறதுக்கு நல்லாத்தான் இருக்கு... செய்வாங்களா??)






மகேந்திர சிங் தோனி-இன் மர்மமான முயற்சிகள் !

Apr 30, 2009

இந்த ஆண்டின் IPL -இல் தோனி எடுக்கும் ஒரு சில முடிவுகள் / முயற்சிகள் சற்றே தெளிவற்றதாகவும் புரிந்து கொள்ள முடியாததாகவும் இருக்கிறது !

சென்னை சூப்பர் கிங்க்ஸ்-இன் முதல் போட்டியில் தமிழகத்தின் இளம் வீரர் 'ரவிச்சந்த்ரா அஷ்வின்' டீம்-இல் இருந்தார்.. [ இந்திய அணிக்காக கண்டறியப்பட்ட சுழல் பந்து வீச்சாளர்களில் (Future Probables) இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது ]. அணியில் இடம்பெற்றாலும் இவருக்கு ஒரு ஓவர் கூட பந்து வீச வாய்ப்பு வழங்கவில்லை அணித்தலைவர் தோனி !! காரணம்.. தெரியவில்லை.. சரி.. முதல் போட்டியில் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று எண்ணினாரோ என நினைதேன்..

இதேபோல நேற்று (30 April) நடைபெற்ற போட்டியில் ஜகதி (Shadab Jakati) என்ற பௌலர் அணியில் இடம்பெற்று ஒரு ஓவர் கூட வீசாமல் இருந்தார் !!

இது போல ஒரு பண்டுவீச்சாலரை அணியில் வைத்துக்கொண்டு உபயோகிக்காமல் இருப்பதற்கு பதிலாக ஒரு ஆல்ரௌண்டர் -யோ அல்லது கூடுதலாக ஒரு பாட்ஸ்மேன் -யோ களமிறக்கி இருக்கலாமே ?

IPL -இல் எடுக்கப்படும் ஆச்சர்யமான முயற்சிகளில் இதுவும் ஒன்றோ ??

பி.கு : யாருக்கேனும் இந்த முயற்சிக்கான காரணம் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன் !