மே 15 - 'சர்வதேச குடும்ப தினம்'

May 15, 2009


ஐக்கிய நாடுகள் சபையால் 1992 -ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டு, ஆண்டு தோறும் மே 15 -ஆம் தேதி 'சர்வதேச குடும்ப தினம்' -ஆக கடைபிடிக்கப்பட்டு வருகிறது..


குடும்பங்களுக்கிடையே, சமத்துவத்தை வளர்ப்பதுவும், வீட்டுப் பொறுப்புக்கள், தொழில் வாய்ப்புக்கள் பற்றி குடும்பங்களின் பங்கினை உணர்த்துவதும் இத்தினத்தின் முக்கிய குறிக்கோள்களாகும்.

சர்வதேச குடும்ப தினத்தின் கருப் பொருட்கள்:

1996 - “Families: First Victims of Poverty and Homelessness”
1997 - “Building Families Based on Partnership”
1998 - “Families: Educators and Providers of Human Rights”
1999 - “Families for all ages”
2000 - “Families: Agents and Beneficiaries of Development”
2001 - “Families and Volunteers: Building Social Cohesion ”
2002 - “Families and Ageing: Opportunities and Challenges”
2003 - “Preparations for the observance of the Tenth Anniversary of the International Year of the Family in 2004″
2004 - “The Tenth Anniversary of the International Year of the Family: A Framework for Action”
2005 - “HIV/AIDS and Family Well-being”
2006 - “Changing Families: Challenges and Opportunities”
2007 - “Families and Persons with Disabilities”
2008 - “Fathers and Families: Responsibilities and Challenges”
2009 - “Mothers and Families: Challenges in a Changing World”

இந்த ஆண்டு , மாறிவரும் உலகத்தில் அன்னையர்களும் குடும்பங்களும் சந்திக்கும் சவால்களை கருவாகக்கொண்டு, அந்த சவால்களை எதிர் கொள்ளவும், அன்னையர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று இது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள மகப்பேறு மருத்துவ வசதிகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பெண் கல்விக்கான அவசியம் குறித்த முக்கியத்துவத்தை குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், "மாறி வரும் உலகில் , பல சவால்களை நாம் எதிர்நோக்கி உள்ள இந்த சூழ்நிலையில், ஒரு சிறந்த அடுத்த தலைமுறையை உருவாக்குவதில் அன்னையர்களின் மகத்தான பங்கு இருப்பது உண்மை " என்றும் குறிப்பிட்டுள்ளனர் .

அன்னையர் தினம் கொண்டாடிய இதே வாரத்தில் 'சர்வதேச குடும்ப தின'த்திலும் அன்னையர்குளுக்கு முக்கயத்துவம் கொடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது..



10 comments:

தேவன் மாயம் said...

அன்னையர் தினம் கொண்டாடிய இதே வாரத்தில் 'சர்வதேச குடும்ப தின'த்திலும் அன்னையர்குளுக்கு முக்கயத்துவம் கொடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது..
////
யாருக்கும் இதுபற்றி தெரியலியே!!!அன்னைக்கு முக்கியத்துவம் மிக அவசியம்

சொல்லரசன் said...

//மாறி வரும் உலகில் , பல சவால்களை நாம் எதிர்நோக்கி உள்ள இந்த சூழ்நிலையில்//

மாறிவரும் சூழலில் குடும்பதினம் அவசியமே.

செந்தில்குமார் said...

@ thevanmayam,

//அன்னைக்கு முக்கியத்துவம் மிக அவசியம் //

ஏதோ உள்குத்தோட சொல்லற மாதிரியே தெரியுதே !! கொஞ்சம் லைட்டா அரசியல் வாசம் வீசுதே...??

@ சொல்லரசன்,

அவசியம்-னு தான் எனக்கும் தோணுது..

வந்தமைக்கும் பின்னூட்டமிட்டமைக்கும் நன்றி !!

Anonymous said...

அதேயேன் கேக்கறிங்க.. அன்னையாரா இருக்கறது ரொம்ப பெரிய விஷயம்.குடும்பம் என்னும் தேர் அன்னையால் மட்டுமே அசையும்.. இந்த பதிவு நல்ல இருக்கு செந்தில்...

செந்தில்குமார் said...

@ மயில்,

உண்மை தாங்க...

குடும்பம்ங்கர தேர் அன்னையால் அசையறது மட்டுமல்ல, செல்லவேண்டிய வழியில் சரியாக செல்லவும், அன்னையரோட பங்கு ரொம்ப முக்கியம்...

வந்தமைக்கும், கருத்துக்கும் நன்றிங்க..

Suresh said...

சும்மா புதுசால இருக்கு ;0 தவலுக்கு நன்றி மச்சான்

செந்தில்குமார் said...

@ சுரேஷ் !

வந்து, பின்னூட்டமிட்டதுக்கு நன்றி மச்சான்..

என்ன மாத்தி மாத்தி நன்றி சொல்லிக்கறோம்...???

sakthi said...

குடும்பங்களுக்கிடையே, சமத்துவத்தை வளர்ப்பதுவும், வீட்டுப் பொறுப்புக்கள், தொழில் வாய்ப்புக்கள் பற்றி குடும்பங்களின் பங்கினை உணர்த்துவதும் இத்தினத்தின் முக்கிய குறிக்கோள்களாகும்.

நல்ல குறிக்கோள்

வித்தியாசமான பதிவு

செந்தில்குமார் said...

@ சக்தி,

வாங்க சக்தி.. வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி..

Anonymous said...

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை எப்படி இணைப்பது என்ற விவரங்களுக்கு

இந்த சுட்டியை சொடுக்குங்கள்

தமிழர்ஸ் பிளாக்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்